இமாம் இப்னுல் ஜவ்ஸி(ரஹ்)
நோய், மரண போன்ற நிகழ்வுகளின் காரணமாக ஒரு முஃமின் நிராசை அடைந்து விடக்கூடாது. இது மனித இயல்புக்கு கொஞ்சம் கடிமான விடயம் என்பது உண்மை.என்றாலும் அவன் பொறுமையை வலிந்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒன்றில் தான் அனுபவிக்கும் சிரமத்துக்கு கூலியைப் பெறும் நோக்கில் அல்லது இறைவனது நியதியில் திருப்தி காணும் நோக்கில் அவன் திருப்தி நிலையை உண்டாக்கிகொள்ள வேண்டும். இந்தக் சிரமங்கள் வாழ்வில் சில பொழுதுகள் மாத்திரமே… அத்துடன் அவை முடிந்து விடும்.
நோயிலிருந்து நிவாரணம் அடைந்தவன் நோயின் போது அவன் கவலைப்பட்டுக் கொண்டிருந்த அந்த பொழுதுகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்கட்டும். இப்போது அந்த நோய் எங்கே சென்றது…? சோதனை நீங்கியது.. கூலி கிடைத்து விட்டது.
அது போலத் தான் பாவங்களின் போது கிடைத்த இன்பம் போய் விடும் பாவம் மட்டும் எஞ்சியிருக்கும்.
மரணம் என்பது வலிகள் நிறைந்த ஒன்று. அதைச் சுமக்கும் ஆன்மாவுக்கு வலிகள் இருக்கத்தான் செய்யும்.
ஒரு நோயாளி; ஆன்மா உடலை விட்டும் பிரிந்து விட்டால் கிடைக்கும் அமைதி நிலையைச் சிந்துத்துப் பார்த்தால், அவனது கஷ்டங்கள் அவனுக்கு அற்பமாகத் தெரியும்.
சோதனைகளைச் சிந்தித்துக் கொண்டு நிராசையில் விழுந்து விடக்கூடாது. இது ஓடத்தைப் போன்றது. ஓடத்தில் பயணிப்பவன் ஒன்றில் சுவர்க்கம் செல்வான். அல்லது நரகம் புகுவான்.
எப்போதும் ஒரு சிரமத்தின் போது கிடைக்கும் நன்மைகளைப் பற்றி சிந்தித்தாக வேண்டும்.
மகிழ்ச்சியானவன் யாரெனில், ஆரோக்கிய நிலையைப் பயன்படுத்துபவனே.
சுவனத்தில் அந்தஸ்தின் அதிகரிப்பு; உலகில் பெறும் நன்மைகளின் அதிகரிப்பில் இருக்கிறது.
நல்லவிடயங்கள் அதிகம் இருக்கின்றன. மிகவும் அவசரமாக அவற்றை ஆரம்பிக்க வேண்டும்.
களைப்பின் ஓய்வு மிகவும் நீண்டது… கவலைப்பட்டவனின் மகிழ்ச்சி மிகவும் அதிகம்..
சுவனத்தில் எந்தக் குறையுமற்ற இன்பத்தைப் பற்றி நினைப்பவனுக்கு முன்னால் அனைத்துக் கடினமான நிகழ்வுகளும் இலகுவாக ஆகி விடும்.
தமிழ் : ஷாமிலா இம்தியாஸ் (உம்மு இயாத் விதாத்)




































