அலிகர் அரசியல் – 2

From left, Pandit Jawarharlal Nehru, Vice President of India's Interim Government, Earl Mountbatten, Viceroy of India and Muhammad Ali Jinnah, President of the Muslim League discuss Britain's plan for India at the historic India Conference in New Delhi, June 2, 1947. (AP Photo/Max Desfor)

அலிகர் பல்கலை கழகத்தில் மாணவர் விடுதியில் மாட்டப்பட்டிருந்த ஜின்னாவின் புகைப்படம் இந்திய விடுதலை வரலாற்றோடும், அவற்றின் நினைவுகளோடும் நெருக்கமுடையது. அலிகர் முஸ்லிம் பல்கலை கழகத்தில் மாணவர்கள் மீது வன்முறை கும்பல் நடத்திய தாக்குதல்களுக்கு ஜின்னாவின் படத்தை காரணமாக சொல்வது ஒரு சாக்கு போக்கு தான்.

ஜின்னாவின் படம் அங்கே அதே இடத்தில் 1938 முதல் இருந்து வருகிறது. இங்கே அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு ஒரு செய்தி கூறுகிறார்கள் அது “நீங்கள் சிறுபான்மையர், உங்கள் வரலாறும் அவற்றின் நினைவுகளும் இந்திய நாட்டின் ஒரு பாகம் என்று ஆகாது.” ஜின்னா எந்த இந்து பெரும்பான்மை வாதம்  குறித்து பயந்தாரோ அசலாக அதே மிரட்டல் தான் இது. காவல்துறை கூட தாக்குதல் நடத்திய குண்டர்களை விட்டு விட்டு மாணவர்கள் மீது கடுமையாக நடந்து கொண்டது. காவலர்கள் உணர்ச்சிக்கும் சட்டத்துக்கும் இடையில் ஊசலாடினார்கள். இந்திய தேசத்தின் அதிகார நிறுவனங்கள் மதவாதமாக மாறிக்கொண்டு இருப்பதை இது உணர்த்துகிறது. 

இதையும் தாண்டி அலிகார் பல்கலை கழகம் சிறுபான்மை தகுதியை தக்கவைக்க போராடிக் கொண்டிருக்கிறது. இப்போதுள்ள பாஜக அரசு அலிகருக்கு சிறுபான்மை தகுதியை மறுக்கிறது. சிறப்பான உரிமைகள் மற்றும் பாதுகாப்பை கொண்டு “சிறுபான்மை” என்ற கருத்தை நியாயமான ஜனநாயக அரசியல், அரசியல் சட்டத்தின் மூலம் உறுதி செய்யும் என்பதால் ஒரு பெரும்பான்மைவாத அரசுக்கு சிறுபான்மை என்கிற கருத்து எப்போதும் அசௌகர்யமாக இருக்கும். அதனால் சிறுபான்மை என்று வருகிறபோது அரசியல் பொறுப்பு உண்டு என்பதால் அவர்களை முஸ்லிம் என்றும் கிறிஸ்டியன் என்றும் மதத்தின் பெயரை கூறி அச்சுறுத்துவது பெரும்பான்மைவாத அரசுக்கு சுலபமாக இருக்கிறது. இது, ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படைகளை மாற்றி விடுகிறது. இவை அனைத்தைப் பற்றியும் ஜின்னா எச்சரிக்கையாக இருந்தார். 

இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு முடிவுற்ற போது அதில் ஜின்னா மட்டும் தான் வெற்றியும்  மரியாதையும் பெற்றார் என்கிறார் Thy Hand, Great Anarch! நூலின் ஆசிரியர் சி. சௌத்தரி. “ஜின்னா விரும்பிய எதையும் ரகசியமாக வைக்க வில்லை. அவரிடம் ஒளிவு மறைவு இருக்கவில்லை. ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள வில்லை. பிரிட்டிஷ் அரசுக்கும் காங்கிரசுக்கும் தோல்வியை கொடுத்தார்.  பிரிட்டிஷ் அரசியல்வாதிகளும் இந்து அரசியல்வாதிகளும் இரு தரப்பிலுமுள்ள எழுத்தாளர்களும் செய்த பல்வேறு சூழ்ச்சிகளையும் துரத்தியடித்ததன் மூலம் அவர்களுக்கு தோல்வியை கொடுத்தார். அவரால் ஏற்பட்ட தோல்வியை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.  இந்தியாவை விட்டு பிரிட்டன் வெளியேறிய சமயம் இந்திய மக்கள் அனுபவித்த துயரங்கள் அனைத்துக்கும்  ஜின்னாவின் அர்த்தமில்லாத கடுமை தான் காரணம் என்று அவர்கள் ஜின்னா மீது பழி சுமத்தினார்கள். ஆனால், அவர்கள் ஜின்னாவின் கடுந்தன்மை (Extremism) என்று கூறுவது முஸ்லிம்களுக்காக அவர் முன் வைத்த குறைந்தபட்ச கோரிக்கைகள் தான். இது மட்டும் தான் அவரது நீண்டகால கோரிக்கை என்று பலருக்கும் தெரியும். முஸ்லிம்களின் தலைவர் முஸ்லிம்களுக்காக பேசக்கூடாது என்று ஏன் ஒருவர் எதிர்பார்க்கிறார்? அவரது கோரிக்கைகள் அர்த்தம் இல்லாதது என்றால் பிரிட்டிஷ் அதிகாரிகளும் காங்கிரஸ் தலைவர்களும் ஏன் அவரது கோரிக்கைகளோடு ஒத்துப்போனார்கள்?” என்கிறார் சௌத்திரி.

சௌத்திரியை பொருத்தமட்டில், ஜின்னாவின் கோரிக்கைகள் நியாயமானது. இது குறைந்தபட்ச கோரிக்கை தான். ஒரு சிறுபான்மை சமூகமாக முஸ்லிம்கள் இதனை கேட்க முடியும். எதிர்காலத்தில் சிறுபான்மையாக போகும் ஒரு சமுதாயத்தின் தலைவராக அந்த சமூகத்தின் உரிமைகளுக்காக எழுந்து நிற்க ஜின்னாவுக்கு உரிமை உண்டு. ஜின்னா தனது அரசியலில் தெளிவாக இருந்தார். மற்றவர்கள தெளிவாக இருக்கவில்லை. அதனால், அவர்கள் அரசியல் போராட்டத்தில் ஜின்னாவிடம் தோல்வி அடைந்தார்கள். 

முஸ்லிம்களுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் அரசியல் அதிகாரம் பெறும் வாய்ப்பை அளிப்பதன் மூலம் நாட்டின் பிரிவினையை தவிர்க்கலாம் என்று பிரிட்டிஷ் தூதுக்குழு (Cabinet Mission) முன்வைத்த திட்டத்தை காங்கிரஸ் நிராகரித்தது. தேசப்பிரிவினை போன்ற பேரழிவுகளை கண்ட பின்னர் ஒப்புக் கொண்டது. அரசியலில் காங்கிரஸ் பக்கம் நிலையான கொள்கை இல்லை என்பதை உணரமுடிகிறது. ஜின்னாவின் கோரிக்கை என்பது அரசியலில் சமநிலை இருக்க இந்துக்களுடன் முஸ்லிம்களும் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதாக மட்டும் இருந்திருக்க கூடும். தூது குழுவின் திட்டத்தை காங்கிரஸ் நிராகரிக்கவே ஜின்னா தனது கோரிக்கைகளை அடைய மத அரசியல் என்ற எல்லைக்குப் போனார். சமரசமே இல்லாத படிக்கு பாகிஸ்தான் என்ற எண்ணத்தை நோக்கி நகர்ந்தார். 

ஜின்னா காங்கிரஸ் மற்றும் இந்துக்களிடத்தில் மென்மை காட்டுகிறார் என்று 1930 களில்  பிற முஸ்லிம் தலைவர்கள் சந்தேப்பட்டார்கள். விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசியலில் முஸ்லிம்கள் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படுவார்கள் என்பதை ஜின்னா படிப்படியாக தான் ஒப்புக்கொண்டார்.
1940 ல் லாகூர் முஸ்லிம் லீக் மாநாட்டில் ஜின்னா தலைமை ஏற்று பேசிய போது, “ முஸ்லிம்கள் சிறுபான்மையோர் இல்லை. எப்படி விளக்கிச் சொன்னாலும் முஸ்லிம்கள் ஒரு நாட்டின் குடி மக்கள் “ என்றார்.
இதனை தர்க்க ரீதியில் நியாயப்படுத்தவும் முயற்சித்தார். சிறுபான்மைக்கு ஒரு நாடு பெரும்பான்மைக்கு ஒரு நாடு என்று ஒரு அரசின் கீழ் இரண்டு நாட்டை வைத்து பராமரிப்பதில் அசௌகர்யம் (Discontent) உண்டாகும் என்றார். இரண்டு நாடாகத்தான் பிரிந்து இருக்க வேண்டும் என்ற நெருக்கடி உண்டான போது ஜின்னா அசௌகர்யமான ஒரு அரசின் கீழ் இருப்பதற்குப் பதில் தனியான ஒரு நாடாக பிரிந்துவிட முடிவு செய்து விட்டார்.