நிலமே எங்கள் உரிமை! எழவே எங்கள்வாழ்வு!

“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு வருகிறது. அதில் கதாநாயகன் தன் மக்கள் வசிக்கும் நிலங்களை அரசு இயந்திரம் மற்றும் மக்கள் விரோத அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்றுவதற்கு தொடர்ந்து போராட்டம் நடக்கும் விதமாக காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். ஆக நிலம் என்பது மனிதர்களுக்கு அதிஅவசியமானது.
நிலம் இயற்கையாக நமக்கு கிடைத்த வரம். அதில் உழைத்து வியர்வை சிந்தி சத்தான சுவையான காய், கனிகளை, பலவிதமான மரங்களையும் நாம் உற்பத்தி செய்யலாம். நாம் உண்டு கழித்து மீதம் இருக்கும் உற்பத்தி உபரியை வைத்து வணிகம் செய்ய முடியும். பகிர்ந்து கொடுக்கலாம். சேமித்து வைக்கலாம்.
ஆதி மனிதன் முதல் இயந்திரமாகிப் போன இன்றைய நாகரீக மனிதன் வரை மனிதர்கள் அனைவரும் உணவுக்காக நிலத்தையும் மண்ணையுமே நம்பி இருக்கின்றனர். சுரண்டல், ஏற்றத்தாழ்வு என இடையில் நிலம் தொடர்பான உரிமைகள் பிரச்சனைகளாக ஆரம்பித்த போது சமூகம் ஆண்டான் அடிமை என இரு பிரிவாகியது. பின்பு நிலவுடமைச் சமூகம், ஜமீன்தார் முறை சமூகம் என்றாகி இன்றைக்கு நவீன உலகம் முதலாளித்துவ சமூகமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மேலுள்ள அனைத்து நிலைகளிலும் நிலமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.
நிலவுடமை சமூகத்தை எடுத்துக் கொண்டால் எந்த சாதிகளிடத்தில் அதிக நிலங்கள் இருந்ததோ அவர்களே அதிகாரம் செலுத்தும் மையங்களாக செயல்பட்டு வந்தனர். நிலத்தில் உழுது உழைத்து உற்பத்தி செய்யும் சாதிகள் தங்கள் கரங்களால் விளைநிலங்களை அலங்கரித்தாலும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மீது அவர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. நிலவுடமையாளர்கள் கொடுக்கும் அற்ப அரிசியும், தானியமும் தான் அவர்களுக்கு கிடைக்கும் பரிசு.
இன்றைக்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் நிலையை நில உரிமையோடு முடிச்சிப் போட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை புரிந்து கொள்ளலாம். 2011 ஆம் ஆண்டு பொது பதிவுகள் மற்றும் கணக்கெடுப்பு ஆணையம் இணைந்து வெளியிட்ட தரவுகளின் படி நாட்டின் உழவு பணியில் 45.40 சதவீதம் இந்துக்கள் இருக்கிறார்கள் என்றும் 60% முஸ்லிம் சமூகம் உற்பத்தி துறையிலும், தொழிற்சாலைகளிலும், உபரி தொழில்களிலும் அதிகமாக இருக்கிறார்கள் என்ற செய்தியும் நமக்கு தெரிய வருகிறது.
உழவு தொழிலில் முஸ்லிம்கள் ஈடுபட்டாலும் நேரடியான விவசாய வேலைகளில் அதிகம் கிடையாது என்பதுதான் உண்மை நிலை.
வட இந்திய மாநிலங்களைப் பொறுத்துவரை முஸ்லிம்களில் பெறும்பான்மையினர் உபரி தொழில்களில் ஈடுபடுகின்றனர். நெசவாளர்களாக, மண்பாண்டம் செய்பவர்களாக, கொல்லர்களாக, தச்சர்களாக, கைத்தறி மற்றும் ஆடை உற்பத்தி துறையில் சிரிய அளவிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பெரும்பலான முஸ்லிம்கள் விவசாயிகள் அல்லஎன்பதை புரிந்து கொள்வது அவசியம் என்கிறார் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் செயலர்பி.எஸ்.கிருஷ்ணன். இப்படியான சிறு தொழில்களில் மூலமே தங்கள் வருமானத்தை தேடுபவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் பி.எஸ்.கிருஷ்ணன்,
2005 இல் இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நிலையை கண்டறிவதற்காக நீதிபதி சச்சார் அவர்களின் தலைமையில் மன்மோகன் சிங் அரசால் அமைக்கப்பட்ட குழு “முஸ்லிம் சமூக மக்களிடம் குறைவான நிலம் இருப்பதே அவர்களின் பின்னடைவுக்கு ஒரு காரணம்” என்ற இந்திய அரசுக்கும், சமூகத்துக்கும் உணர்த்தியது.
இந்திய மக்கள் தொகையில் கிராமத்தில் இருப்போரில் 94% பேருக்கு சொந்த வீடு உள்ளிட்ட சொந்த நிலம் இருக்கிறது. ஒரு ஏக்கர் கொண்டவர்களின் சராசரி 81%. அதிலும் உயர் சாதி மற்றும் இடைநிலை சாதிகள்தான் அதிக நிலம் கொண்டவர்கள். 12.7% நிலம் தான் முஸ்லிம்களிடத்தில் உள்ளது. மற்ற மத சிறுபான்மைகளிடத்தில் 5.4 நிலம் உள்ளது. நம் நாட்டில் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமூகமான தாழ்த்தப்பட்ட மக்களிடம் 19% நிலமும் மலைவாழ் மக்களிடம் 8.4%மும் இருக்கிறது. சொந்த நிலமற்ற சமூகம் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறது என்பதுதான் வரலாறு நமக்குச் சொல்லும் பாடம். அதை இந்த கணக்கெடுப்பு உண்மைப்படுத்துகிறது.

தரவுகள் இப்படி இருக்க ஒரு விசித்திர உண்மை என்னவென்றால் உலகத்திலேயே முஸ்லிம்களால் கொடையளிக்கப்பட்ட வக்ஃபு சொத்துக்கள் இந்தியாவில்தான் அதிகம். ஆம் இந்திய இரயில்வே துறை மற்றும் இந்திய இரணுவத்துக்குப்பிறகுப் பிறகு அதிகமான சொத்துக்களையும், நிலங்களையும் கொண்டிருப்பது இந்திய வக்ஃப் ஃபோர்டுதான்.
பதிவு செய்யப்பட்ட 4.9 லட்சம் சொத்துக்களின் மதிப்பு 1.20 லட்சம் கோடி. இந்த தொகையை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது. இந்திய முஸ்லிம்களின் முன்னோர்கள் ஆறு லட்சம் ஏக்கர் நிலங்களை தங்களின் சந்ததிகளின் உயர்வுக்காக தங்களது சொத்துக்களை இறைப் பாதையில் வக்ஃபு செய்திருக்கிறார்கள்.
சச்சார் குழு பரிந்துரைப்படி இருக்கின்ற வக்ஃப் சொத்துக்களை முறையாக பராமரித்து வந்தாலே ஆண்டுக்கு 12.000 கோடி ரூபாய் வருமானம் வரும். அதை வைத்து முஸ்லிம் சமூகத்தின் வறுமையை மட்டும் இல்லாமல் மற்ற சிறுபான்மை மக்களின் பொருளாதார நிலையையும் சரி செய்து விடலாம்.
தற்போது இந்திய வக்ஃபு வாரியத்தின் வருமானம் என்பது வெறும் 163 கோடி மட்டுமே. முஸ்லிம்களின் வக்ஃபு சொத்துக்கள் குறித்த அறியாமையாலும், மெத்தனப் போக்காலும் கேட்பாடற்றுக் கிடக்கிறது சமுதாயத்தின் சொத்துக்கள்.
கல்வியில் பின் தங்கியிருக்கிற முஸ்லிம் சமுதாயத்திற்குத் தேவையான தரமான கல்வி நிலையங்களை உருவாக்க வக்ஃபு துறையால் முடியும் நியாயமாக, சரியாக அரசியல் தலையீடு இல்லாமலிருந்தால்.
இன்றைக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஏழை, நடுத்தர முஸ்லிம் குடும்பங்களுக்கு வாடகைக்கு வீடுகள் கிடைப்பதில் இருக்கும் சிக்கல்கள் சொல்லிமாளாது. முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக வீடு கொடுக்க மறுக்கிறார்கள். பல முஸ்லிம்கள் நண்பர்களின் வீடுகளில் ஒரு அகதியின் வாழ்க்கையைப் போல காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு புறம் பாதுகாக்கப்பட வேண்டிய நம் முன்னோர்கள் வழங்கிய வக்ஃபு சொத்துக்கள் சமூக அக்கறையற்றவர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரமிக்கவர்கள் மூலம் ஆக்ரமிக்கப்பட்டு பறிபோய்க்கொண்டிருக்கிறது.
“நிலமே ஒரு மனிதனின் உரிமை” சமுதாய தன் மானம் அதில் அடங்கி இருக்கிறது. ஆகவே அஸ்தமம் ஆவதற்கு முன் விழித்துக் கொண்டு நம் நிலங்களை மீட்டெடுப்போம். சமூகத்தின் தடை போக்க முயற்சிப்போம்.
The Muslim community has also registered a moderate 0.8 per cent growth to touch 17.22 crore in the 10-year period between 2001 and 2011, up from 13.8 crore, while the Hindu population showed a decline by 0.7 percent at 96.63 crore during the period, according to the Census data on religion.

As per the 2001 census, India’s total population was 102 crore, of which Hindus comprised 82.75 crore (80.45 per cent) and Muslims were 13.8 crore (13.4 per cent).